உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் வேள்வி வளர்த்தப்பட்டு மாரியம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி பூச்சொரிதல், நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. 2-வது நிகழ்வாக 16-ம் தேதி கம்பம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் அடையாளமாக கருதப்படும் கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.



முன்னதாக கோவிலில் வேள்வி வளர்த்தப்பட்டு மாரியம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் கொடியேற்றம் பகுதியில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...