சுங்கம் பகுதியில் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி

சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பின்னர் ஓட்டுபோட்டுவிட்டு வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டுப்பதிவு பல்வேறு மையங்களில் இன்று (ஏப்ரல்.19) விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற திட்டத்தின் கீழ் வாக்குச்சாவடி மையங்களில் மரக்கன்றுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் வாக்கு போட்டு விட்டு வருபவர்களுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு இன்று மதியம் சென்றார். பின் வாக்குச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குப்பதிவு குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகளை ஒட்டு போட்டுவிட்டு வருபவர்களுக்கு வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...