கோவையில் ரயில் தடம் அருகே உள்ள குடியிருப்புகளில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்

SIHS காலனி, இருகூர் ரயில்வே பாலம் உட்பட்ட 20 இடங்களில் 22 கேமராக்கள், ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 இடங்களில் 12 கேமராக்கள், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 27 இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.


கோவை: கோவை மாநகரில் ரயில் தடங்கள் அருகே உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு இல்லை என்பதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது அண்மையில் நடந்த ஒரு சம்பவம் மூலம் வெளிவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி அதிகாலை நேரத்தில், 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பீளமேடு பூரணி நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் இல்லத்தில் ரூ.10 லட்சம், 30 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு அருகே உள்ள ரயில் தடம் வழியே சென்று தப்பித்துள்ளது. வெளிச்சம் இல்லாததாலும், கண்காணிப்பு இல்லாததாலும் எளிதில் அவர்கள் தப்பியுள்ளனர்.

இதையடுத்து கோவையில் ரயில் தடங்கள் அருகே உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்து முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக 103 இடங்களில் இதை செய்ய கோவை மாநகர காவல் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். தண்டவாளம் உள்ள வழிநெடுகவே இந்த கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன.

அதன்படி, சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு ஒண்டிப்புதூர், SIHS காலனி, இருகூர் ரயில்வே பாலம் உட்பட்ட 20 இடங்களில் 22 கேமராக்கள், ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 இடங்களில் 12 கேமராக்கள், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 27 இடங்கள் மற்றும் போத்தனூர், துடியலூர், வடகோவை, இருகூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதிகளில் கார்ப்ரேட் சமூக பொறுப்பு நிதி (CSR) உதவியுடன் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்று தகவல் இன்று (ஏப்ரல்.18) வெளியாகியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...