வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் பட்டியல் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி(தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை), கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.17) தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தல் அன்று, வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக உபயோகப்படுத்த கூடிய ஆவணங்கள் குறித்த பட்டியலை தெரிவித்துள்ளார். அதன்படி,

1.வாக்காளர் அடையாள அட்டை

2.ஆதார் அட்டை

3.மகாத்மா காந்தி(தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை)

4.கணக்கு புத்தகங்கள் (வங்கி அஞ்சலகங்களால்

புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)

5.மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

(மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)

6.ஓட்டுனர் உரிமம் (பணியாளர் அடையாள அட்டை)

7. இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது)

8.வருமான வரி (நிரந்தர கணக்கு எண் அட்டை)

9.ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது)

10.இந்திய கடவுச்சீட்டு 10 ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது)

11.அடையாள அட்டை (மத்திய/மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது)

12.அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற/சட்டமன்ற பேரவை/சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது) ஆகியவற்றை கொண்டு வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...