நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் சுதந்திர போர் - சூலூரில் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம்

சிறைப்பட்டு செக்கிழுத்து வாழ்விழந்து மீட்டுத் தந்த சுதந்திரம், வெள்ளையரை வெளியேற்றிய அந்த தியாகம் இன்று இந்த கொள்ளையர்கள் கையில் நாட்டை கொடுக்கவா? என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.



கோவை: கோவை சூலூர் பகுதியில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேற்று (ஏப்ரல்.16) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், உயிரே உறவே தமிழே வணக்கம் என தனது உரையை துவக்கினார். கணபதி ராஜ்குமார் கவுன்சிலர் ஆகவும் மேயராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என தெரிவித்தார். 80 ஆண்டுகளுக்கு முன்னால் என் தந்தை சீனிவாசன் எந்த காரணத்திற்காக காந்தியின் பின்னாலும், காமராஜர் பின்னாலும் சென்றாரோ அதே காரணங்களுக்காக நானும் புறப்பட்டிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி என்றார். உங்கள் மூதாதையரை நினைவு கொள்ளும் நேரம் இது என தெரிவித்த அவர், சிறைப்பட்டு செக்கிழுத்து வாழ்விழந்து மீட்டுத் தந்த சுதந்திரம் வெள்ளையரை வெளியேற்றிய அந்த தியாகம் இன்று இந்த கொள்ளையர்கள் கையில் நாட்டை கொடுக்கவா? என கேள்வி எழுப்பினார்.



வாய்ஜாம் பேசுபவர்கள் பேச்சில் மயங்கி விடாதீர்கள் என தெரிவித்தார். மேலும் ஒன்றிய பாஜக அரசு மீது என்ன கோபம் என்று என்னை கேட்கிறார்கள். எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. நாம் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு வழி செய்கின்ற அனைவருக்கும் வணக்கம் சொல்வோம். வந்தனம் சொல்வோம். அதற்கு மாறாக செய்பவர்கள் நமக்கு விரோதிகள் கூட அல்ல வேண்டாதவர்கள் என கூறினார்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு அவரவர்க்கு அவரவர் உரிமை, மதம், கடவுள், உணவு, உடை என்று அனைவருக்கும் சமமான நீதி வழங்குவது தான் ஜனநாயகம். புத்தர் சொன்ன தம்மபதம் என்ற நேர்வழி என்பதும் அதுதான் என தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது 97 கோடி பேர் வாக்களிக்க போகிறார்கள் எனவும், இது இரண்டாவது சுதந்திரப் போர் என்று கூறினால் மிகையாகாது என தெரிவித்தார். 19ஆம் தேதி நீங்கள் சரியான முடிவு எடுத்தால் நமக்கு ஜூன் 4 தேதி சுதந்திர நாள் என்பதை மறந்து விடாதீர்கள் என கூறினார்.

பத்து வருடத்திற்கு முன்பு இருந்த சூலூர் இது அல்ல எனவும், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இங்கு வந்து விமான நிலையம் கொண்டு வருகிறேன், ரயில் விடுகிறேன் என்றெல்லாம் ரீல் விடுவது தேர்தலுக்கு தானே எனவும், 10 வருடம் இருக்கும் பொழுது இதை செய்திருக்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டை எடுத்தால் கட்சி பாரபட்சம் பாராமல் படிப்படியாக பல தலைவர்கள் நம்மை முன்னுக்கு கொண்டு சென்ற திராவிட மாடல் இது எனவும், திராவிடர்கள் இயற்றிய மாடல் இது எனவும் தெரிவித்த கமலஹாசன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து இதற்கு நிகராக இந்தியாவில் எங்கு தேடிப் பார்த்தாலும் கிடைப்பது கடினம் என தெரிவித்தார்.

மேலும் உள்ளூரில் இருக்கும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உடன் பணிபுரிபவர்களிடம் கேட்டால் "அங்கு நாசம் செய்து விட்டார்கள் வேலை தேடி உங்கள் ஊருக்கு வந்துள்ளேன் என்னை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரர்களே" என்று கூறுவார்கள் என இந்தியில் பேசினார். பாஜக மாடல் vs திராவிட மாடல் அப்படித்தானே மல்யுத்தம் செய்து விளையாட பார்க்கிறீர்கள் எனவும், இது விளையாட்டல்ல உங்கள் வாழ்க்கையுடன் விளையாடி விடுவார்கள் என கூறினார்.

21 பணக்காரர்கள் 70 கோடி மக்களின் சொத்தை குவித்திருக்கும் மாடல் பாஜக மாடல் என விமர்சித்த அவர், ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கும் இந்த மாடல்தான் நல்ல மாடல். இந்தியா பின்பற்ற வேண்டிய மாடல் இதுதான் எனவும் கூறினார். உள்ளூர் பணக்காரனை உலக பணக்காரனாக்குவது சாதனை அல்ல. கடைநிலை ஏழையை கரையேற்றுவதுதான் சாதனை என தெரிவித்தார். பல முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு என தெரிவித்த அவர், அமெரிக்கா, ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகளை போட்டார்கள். அதேபோல் இங்கும் பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி என்ற இரண்டை போட்டார்கள், அதில் நல்ல முதலாளியாக இருந்தவர்கள் எல்லாம் தொழிலாளியாக தொழிலுக்கு வந்து விட்டார்கள் என்றார்.

நகைக்கடையில் செய்த செங்கோலை கையில் பிடித்து கொண்டிருப்பது செங்கோல் அல்ல உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கின்ற இந்த விரல் தான் செங்கோல் நீங்கள் வைக்கும் புள்ளிதான் பெரிய புள்ளி யார்? சின்ன புள்ளி யார்? என்பதை முடிவு செய்யும் என தெரிவித்தார்.

மேலும் இது உங்கள் வாழ்க்கைக்கான போர் எனவும், ஜூன் நான்காம் தேதி விடுதலை கிடைக்க வேண்டும் என்றால் இன்று அதற்கு சிந்தித்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். என்னை இந்தப் பக்கம் திரும்பு அந்தப்பக்கம் திரும்பு என்று கூறுகிறீர்கள், நீங்கள் நல்வழியில் திரும்புங்கள் தமிழகமே உங்களை நோக்கி திரும்பும் நாடே உங்களை நோக்கி திரும்பும் திராவிட மாடலை நோக்கி திரும்பும் அப்படி திரும்பினால் நாளை நமதே எனக் கூறினார். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...