கோவில்பாளையம் அக்ரஹார சாமக்குளத்திற்கு மேலும் 2 புதிய நீர்வழிப்பாதைகள் கண்டுபிடிப்பு

மழைநீர் வரும் பாதைகளில் இயந்திரங்களைக் கொண்டு குப்பை, மண்மேடு, புதர்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் அகற்றினர். இதனால் தற்போது அக்ரஹார சாமக்குளத்திற்கு 7 நீர்வழிப்பாதைகள் உள்ளன.


கோவை: கோவை, கோவில்பாளையம் அருகே 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்ரஹார சாமக்குளம் ஏரி, கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த 5 நீர் வழிப்பாதைகள் வழியாக ஏரிக்கு மழை நீர் வரும் நிலையில், மேலும் 2 நீர் வழிப்பாதைகள் இருப்பது ஆய்வில் தெரிந்தது.

இதனையடுத்து இன்று ஏப்ரல்.16 அப்பாதைகளில் இயந்திரங்களைக் கொண்டு குப்பை, மண்மேடு, புதர்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் அகற்றினர். இதனால் தற்போது அக்ரஹார சாமக்குளத்திற்கு 7 நீர்வழிப்பாதைகள் உள்ளன.

இதனால் இனி வரும் காலங்களில் இக்குளத்திற்கு எளிதில் நீர் நிரம்ப வாய்ப்புள்ளதால், அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், தன்னார்வலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொடர்ந்து குளம் சீரமைப்பு பணியினை மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...