கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை சோதனை

மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மீனா லோகுவின் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 1.5 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் பணம், பொருள், ஆவணம் என எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் 46வது வார்டு கவுன்சிலரும், கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று (ஏப்ரல்.15) திடீர் சோதனை நடத்தினர்.

மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீனா லோகுவின் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 1.5 மணி நேரமாக இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பணம், பொருள், ஆவணம் என ஏதும் கைப்பற்றப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் வீட்டிலிருந்த கார், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவையில் நடந்த இந்த சோதனை காரணமாக திமுகவினரிடையே பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...