சொத்து பிரச்னை காரணமாக தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை

கோர்ட்டுக்கு வந்த கோவிந்தம்மாள் வளாகத்தில் விஷம் அருந்தி விட்டு, பின்னர் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். பெண்ணின் சடலத்தை கைப்பற்றி தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தெக்கலுாரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், (60). இவரது தந்தை ராமசாமி மற்றும் இரண்டு சகோதாரர்கள் பாலசுப்ரமணி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சொத்து தகராறு ஏற்பட்டது. இவ்வழக்கு தாராபுரம் உரிமையியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கின் விசாரணையில் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது.

கோர்ட்டுக்கு வந்த கோவிந்தம்மாள் வளாகத்தில் விஷம் அருந்தி விட்டு, பின்னர் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சடலத்தை கைப்பற்றி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



இதுகுறித்து போலீசார் கூறியதாவது, இறந்து போன கோவிந்தம்மாள் பாகப்பிரிவினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கில் தோல்வியடைந்தார். மேல்முறையீட்டை கோர்ட் தள்ளுபடி செய்த காரணத்தால், மனமுடைந்து அவர் கோர்ட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன் விஷத்தை குடித்து விட்டு, கூடையில் வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பற்ற முயன்றும் முடியவில்லை. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், கோவிந்தம்மாள் தன் தாயை கட்டையால் தாக்கியது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...