அனைத்து வார்டுகளில் உள்ள கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு !


கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள பொது மக்கள் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும்  மாநகராட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள பொது மக்கள் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும் மாநரகாட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும், மாநகராட்சிப் பொறியாளர்களுக்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும் மாநரகாட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மதிப்பீடுகள் தயாரிக்கும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைப்பதற்கான தொகையினையும் மேற்படி மதிப்பீட்டில் சேர்த்து தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சிப் பொறியாளர்களும் தங்கள் வார்டு பகுதிகளிலுள்ள அனைத்து மாநகராட்சிக் கட்டிடங்களையும் ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில்லாத மாநகராட்சி கட்டிடங்களுக்கு அதனை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...