வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என வால்பாறையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

ஆழியாறு சோதனை சாவடி, அட்டகட்டி வாட்டர்பால்ஸ், ஐயர் பாடி 40 ஆவது கொண்டை ஊசி வளைவு, வால்பாறை மையப்பகுதி, சோலையார் அணை பகுதி, கேரளா தமிழக எல்லையான மலுக்கபாறை பகுதி ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் ஐன்பது ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணம் இன்றி வாகனத்தில் கொண்டு செல்லும் பணத்தை சோதனை செய்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.



இதில் வால்பாறை பகுதியில் முதன்மை பறக்கும் படை குழுவினர் மற்றும் இரண்டாம் நிலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர. நள்ளிரவு ஒரு மணி அளவில் வால்பாறை டவுன் பகுதியில் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

Fst 3,124 b d o பாலசுப்ரமணியம் மற்றும் காவல் துறையினர் ஜகவர் மற்றும் வீடியோ கிரபார் விமல், இராணுவ வீரர்கள், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆழியாறு சோதனை சாவடி, அட்டகட்டி வாட்டர்பால்ஸ், ஐயர் பாடி 40 ஆவது கொண்டை ஊசி வளைவு, வால்பாறை மையப்பகுதி, சோலையார் அணை பகுதி, கேரளா தமிழக எல்லையான மலுக்கபாறை பகுதி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...