தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் மனசாட்சிபடி நடந்துகொள்ள வேண்டும் என எஸ்.பி.வேலுமணி பேட்டி

இயற்கையாகவே உள்ள குடிநீர் பிரச்சனையில் எதிர்கட்சிகள் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட செய்வதாகவும், தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் மனசாட்சி படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான மென்பொருள் உருவாக்கத்தின் இறுதி போட்டியின் துவக்கத்தில் கலந்து கொண்ட பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பல நூறு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தற்போது குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. 

இந்த குடிநீர் பிரச்சனையில் எதிர்கட்சிகள் மக்களை தூண்டி சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்' என்றார். 

இதைத்தொடர்ந்து, அமைச்சர் தொகுதியில் குடிநீர் பிரச்சனைக்காக மக்கள் போராடி வருவது தொடர்பாக கேட்டதற்கு, திமுகவினர் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட செய்கின்றனர். பல்வேறு திட்டங்களை தான் தொகுதிக்கு செய்து உள்ளேன். எனவே தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் அவர்களின் மன சாட்சிபடி நடந்து கொள்ள வேண்டும்.

மேலும், கோவைக்காக மோனோ அல்லது மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து உள்ளேன் என்றார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து கேட்டபோது பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...