அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை அருகே உள்ள புத்தர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும், புத்த சீடருமான பிக்கு மெளரியா கலந்துகொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட செல்வபுரம் கிராமத்திற்கு அருகில் மலை அடிவார பகுதியில் புத்த சீடர்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தர் கோவில் அமைத்து பூஜை செய்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்.



இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும், புத்த சீடருமான பிக்கு மெளரியா கோவிலுக்கு வருகை புரிந்தார். அதன் பின் உலக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணுதல், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் எந்த ஒரு வன்முறை இல்லாமல் நடைபெற வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் தமிழ் புலிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், மடத்துக்குளம் ஊடகப்பிரிவு நம்பிராஜன், எலையமுத்தூர் திமுக கிளை தலைவர் பழனிச்சாமி, கோவை ஆனந்தன், புத்தர் கோவில் ஆலய நிர்வாகிகள் காளியப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...