உடுமலையில் என்.ஆர்.சி மதுபான கூடத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

என்.ஆர்.சி மதுபான கூட்டத்தில் இருந்த நாற்காலிகள், தண்ணீர் கேன்கள் மற்றும் பெயர் பலகையை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் நான்காவது வார்டு யூ எஸ்.எஸ்.காலனி குடியிருப்புக்கு மிக அருகாமையில் என்.ஆர்.சி மதுபானக்கூடம் செயல்பட்டு வருகின்றது. இந்த மதுபான கூடத்தில் மது அருந்தும் குடிமகன்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தினம் தோறும் சிறுநீர் கழிப்பது, பெண்களை தகாத வார்த்தையில் திட்டி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று மதுபான கூடத்தில் மது அருந்திவிட்டு வந்த நபர் அருகில் உள்ள வீட்டிற்கு முன்பு சிறுநீர் கழித்தார். அந்தநபரை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கேட்கும்போது இருவருக்கும் இடையேதகராறு ஏற்பட்டதாக கூறபடுகின்றது. இது குறித்து என்.ஆர்.சி மதுபான கூடத்தில் பெண்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கேட்டபோது பார் ஊழியர்களுக்கும் பெண்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.



இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் மதுபான கூடத்திற்கு சென்று அங்கிருந்த நாற்காலிகள், தண்ணீர் கேன்கள் மற்றும் பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். பின்னர் உடுமலை தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த உடுமலை டிஎஸ்பி தலைமையில் சுகுமாறன் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தனியார் மதுபான கடையை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் இல்லை என்றால் கலைய மாட்டோம் என கூறிய நிலையில் வலுக்கட்டாயமாக பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்களை காவல்துறையினர் கைது செய்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலையில் தனியார் மதுபான கடையை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...