கோவை மருதமலை கோவிலில் யானைகள் முகாமிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல்

வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி நேற்று 10க்கும் மேற்பட்ட யானைகள் மருதமலை கோவில் படிக்கட்டு பாதையில் முகாமிட்டது. யானைகள் உலாவிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


கோவை: தமிழ்ப் புத்தாண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு கோவை மருதமலை கோவிலில் பக்தர் கூட்டம் இன்று ஏப்ரல்.14 அலைமோதியது. பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும், மலைப் பாதை வழியாகவும், கோயில் பேருந்து மூலமாகவும் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி நேற்று (ஏப்ரல்.13) 10க்கும் மேற்பட்ட யானைகள் கொண்ட கூட்டம் படிக்கட்டு பாதையில் முகாமிட்டது. இதனால் நேற்று அந்த வழியாக செல்லும் பக்தர்களுக்கு வனத் துறையினர் தடை விதித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



அதனை தொடர்ந்து இன்று (ஏப்ரல்.14) பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே மருதமலையில் யானைகள் உலாவிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...