கோவையில் உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி - நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை

கோவை மண்டல இணை இயக்குனர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதி தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதில், தீயணைப்பு துறையில் மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதேபோல், இன்று (ஏப்ரல்.14) காலை கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள தெற்கு தீயணைப்பு நிலையத்தில் உயிர் நீத்தாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவை மண்டல இணை இயக்குனர் சரவணகுமார் தலைமை வகித்தார்.



அப்போது அவர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.



இதேபோல், தீயணைப்பு வீரர்களும் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் புலுகாண்டி, உதவி அலுவலர்கள் அழகர்சாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுவதால் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...