தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை மருதமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்

தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே அதிகளவிலான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.


கோவை: தமிழ்ப்புத்தாண்டு இன்று (ஏப்ரல்.14) கொண்டாடப்படுகிறது. சித்திரைக்கனி என்று கொண்டாடப்படும் இன்றைய தினம் மக்கள் பலரும் இல்லங்களில் செல்வம் பெருக வேண்டும், வாழ்க்கை செழிக்க வேண்டும் என முக்கனிகளையும், தங்கம், வெள்ளி நாணயங்கள், நகைகளை வைத்து வழிபடுவர். மேலும் அனைத்து கோவில்களுக்கு சென்று வழிபடுவர்.



அதன்படி, தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே அதிகளவிலான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.



பல்வேறு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் படிக்கட்டு வழியில் செல்வதற்கு 7 மணியில் இருந்து தான் அனுமதி என்பதால் படிக்கட்டு வழியில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். சிலர் தடுப்புகளை தாண்டி குதித்து சென்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்குபோலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...