திருப்பூர் தொழில் துறையினரை சந்திக்கும் முதல்வர் மு க ஸ்டாலின்..!

அவிநாசி, பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.


திருப்பூர்: கோவையை அடுத்து இன்று திருப்பூரில், நீலகிரி மற்றும் திருப்பூர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

அவிநாசி, பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் உள்ள தொழில் துறையினருடன் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளார்.பின்னலாடை, ஆயத்த ஆடை, பொறியியல் துறை சார்ந்த தொழில் முனைவோர் மற்றும் தொழில் அமைப்பினர், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கின்றனர். 

மூல பொருட்கள் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி, ஒன்றிய அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கை உள்ளிட்டவற்றால் கடும் நெருக்கடியில் திருப்பூர் தொழில் துறையினர் தத்தளித்து வரையும் நிலையில் இன்றைய கலந்துரையாடல் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

இந்த நிலையிலே தொழில்துறையின் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில், அவர்களின் குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிவார். 

அதேபோல, கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள தொழில் முனைவோர்,முதல்வரை திருப்பூரில் தங்கியுள்ள இடத்தில் சந்திக்கின்றனர்.

இந்த சந்திப்பில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வீட்டுவசதி வாரியதுறை அமைச்சர் முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...