தாராபுரத்தில் நகரச் செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு

பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள எடுத்துக்கூறி நகரச் செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக நகரச் செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரன் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.



தாராபுரம் பெரிய கடைவீதியில் உள்ள மரக்கடை பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா மினி கிளினிக், உள்ளிட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கியது குறித்தும், திமுக அரசின் தற்போதைய சொத்துவரி, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஆகியவற்றை எடுத்துச் சொல்லியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி சிறுபான்மை மக்களுக்கு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அரசில் வழங்கிய நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லியும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனார்.

இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் எஸ். டி. பி. ஐ. கட்சி தேமுதிக ஆகிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...