காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரிப்பு

என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவேன் என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்குறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட துர்க்கை அம்மன் கோவில், அய்யாசாமி நகர், மூர்த்திரெட்டி பாளையம், தட்டான் தோட்டம், களிமேடு, செம்மங்காலிபாளையம் ஆகிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வாக்கு சேகரித்தார்.



நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில், என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலையில் நகர பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில், என்னை நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவேன் எனவும் கூறினார். உங்களுக்காக இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்காக காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். இதில், மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...