சென்னையில் இருந்து கோவை வழியாக கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 10, 17, 24ம் தேதிகளில் மாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு (06043) ரயிலானது முறையே மறுநாள் காலை 8.45க்கு கேரளா மாநிலம் கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, சேலம், கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 10, 17, 24ம் தேதிகளில் மாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு (06043) ரயிலானது முறையே மறுநாள் காலை 8.45க்கு கேரளா மாநிலம் கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து ஏப்ரல் 11, 18, 25ம் தேதிகளில் மாலை 6.25க்கு (06044)புறப்பட்டு, முறையே மறுநாள் காலை 10.40க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயிலில் 14 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...