காற்றாலை மின்சாரத்தை அரசு உற்பத்தி செய்யாமல் தனியாருக்கு தாரை வார்ப்பு - பொள்ளாச்சியில் சீமான் புகார்

தமிழக விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தை காவேரி ஆற்றங்கரையில் மட்டுமே செயல்படுத்த வேண்டுமா?, கங்கை ஆற்றங்கரையில் செயல்படுத்தலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர்கட்சியின் வேட்பாளர் சுரேஷ் குமாரை ஆதரித்து இன்று பொள்ளாச்சி பல்லடம் சாலை ராஜேஸ்வரி திடலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, 10 ஆண்டு பாஜக ஆட்சியில் நாட்டில் எதுவும் வளர்ந்து விடவில்லை. மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக சேர்ந்த 39 எம்பிக்கள் மக்களுக்காக எதுவும் பேசவில்லை. மீத்தேன் திட்டத்தை தமிழக விவசாயிகளை பாதிக்கும் காவேரி ஆற்றங்கரையில் மட்டுமே செயல்படுத்த வேண்டுமா?, கங்கை ஆற்றங்கரையில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்.

காற்றாலை, சூரிய ஒளி மற்றும் கடல் அலை மின்சாரத்தை அரசை உற்பத்தி செய்யாமல், தனியாருக்கு தாரை வார்த்து இருப்பதாகவும், தேர்தல் பரப்புரையின் போது சீமான் குற்றம் சாட்டி பேசினார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...