தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குழிப்பட்டி மலைவாழ் மக்கள் அறிவிப்பு – அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம்

குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் (22) பிரசவ வலியில் துடித்த நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஏழு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலை பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் குழிப்பட்டி, குருமலை, மாவடைப்பு என 15 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. ஐந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் சாலை, குடிநீர், வீடு என அடிப்படை வசதி இல்லாமல் பல ஆண்டு காலமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட பாதிக்கப்படும் மக்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலமும், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பல உயிர் இழப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் (22) பிரசவ வலியில் துடித்த நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஏழு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலை பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.



இந்த நிலையில் பல ஆண்டுகளாக சாலை வசதி மலைவாழ் மக்கள் வேண்டுமென மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தற்போது வரைசாலை வசதி அமைக்கப்படாத நிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மலைவாழ் மக்கள் புறக்கணிக்க போவதாகவும், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு யாரும் ஓட்டு கேட்க வர வேண்டாம் என ஆவேசமாக தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...