கோவை சின்னியம்பாளையம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் தங்க வைர நகைகள் கொள்ளை...!

கோவை சின்னியம்பாளையம் தொட்டிபாளையத்தில், பூட்டி இருந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில், 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து பிளம்பர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சின்னியம்பாளையம் தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் காங்கயத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று விட்டு, அன்று இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், உடனே உள்ளே சென்று பார்த்தபோது உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது.

பீரோவை சோதனை செய்து பார்த்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து குமாரசாமி, பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் சென்று சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மேலும் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள், நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...