கோவை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் ஐயப்ப சாமி கோவிலில் வருகின்ற 12-ம் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது, 2000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் ஐயப்ப சாமி கோவிலில் வருகின்ற 12-ம் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவாக இன்று மாலை கொடி ஏற்றம் நிகழ்ச்சி ஆலயத்தின் தந்தை பிரம்மஸ்ரீ பாலக்காட்டில்லத்து சிவப்பிரசாத் நம்பூதிரி தலைமையில் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் எட்டு காலம் பூஜைகள் நடைபெற உள்ளது.



12-ம் தேதி அன்று சுவாமி ஐயப்பன் திருவுருவ உற்சவ சிலையை மூன்று யானைகளுடன் மேல் அமர்த்தி செண்டை மேளம் முழங்க பஞ்சவாத்தியம் உடன் சித்தாபுதூர், சத்தி ரோடு, கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இறுதி நாளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் 2000 க்கு மேற்பட்டோருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...