தாராபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு உறுதி குறித்த கொடி அணிவகுப்பு

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளான்று, சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி, பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புக்காவலர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் தாராபுரத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. வருகின்ற 19 -ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பல்வேறு விதமாக பலப்படுத்தப்பட்டு வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளான்று, சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி, பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புக்காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இப்பேரணியை தாராபுரம் வடக்கு காமராஜபுரம் பகுதியில் இருந்து காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் துவக்கி வைத்தார்.



இதையடுத்து பேரணி, பெரிய கடைவீதி , ஜவுளிக்கடை வீதி பூக்கடைக்காரர் பொள்ளாச்சி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் மற்றும் அலங்கியம் சாலை வரை பேரணி நடைபெற்றது. இதில் தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர், ஐந்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 40 போலீசார் மற்றும் குஜராத் ஆயுத படை போலீசார் என மொத்தம் 100 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...