மேட்டுப்பாளையம் உழவர் சந்தையை பார்வையிட்ட வாணவராயர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள்

வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் மற்றும் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின் செயல்பாடுகள் பற்றி மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


கோவை: வாணவராயர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் "கிராம தங்கல்" திட்டத்தின் ஒரு பகுதியாக உழவர் சந்தை மேட்டுப்பாளையத்தில் இன்று (ஏப்ரல்.5) பார்வையிட்டனர்.

அப்போது நிர்வாக அலுவலர் ஷர்மிளா, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் மற்றும் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.

அங்கு சுவர் ஓவியமாக காய்கறிகளின் பயன்பாடுகளை தீட்டி உள்ளது மிகவும் பயனாக உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு இலவசமாக எடையிடும் மின்னணு தராசு, மேடை தராசு, குளிர் சேமிப்பு கிடங்கு, பேருந்து வசதி, மீண்டும் மஞ்சப்பை துணிப்பை இயந்திரம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

அவரையில் மூக்குத்தி அவரை, சிறகு அவரை, தம்பட்டை அவரை மற்றும் டபுள் பீன்ஸ் மாணவிகள் புதிதாக தெரிந்து கொண்டார்கள். மேட்டுப்பாளையம் உழவர் சந்தை பயன்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமையப்பெற்றது என மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...