சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடன் இணைந்து ஆனைமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு சேகரிப்பு

அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டம் ஆகியவற்றை நிறுத்தி வைத்து திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது என்று அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடன் இன்று வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம், ஆலங்கடவு, பூச்நாரி, ஆத்து பொள்ளாச்சி ஆகிய கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அதிமுக வேட்பாளர் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கார்த்திகேயன், அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை நிறுத்தி வைத்து திமுக அரசு மக்களை வஞ்சித்து வருவதாகவும், மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலையும், கூலியும் தராமல் கூலித் தொழிலாளர்களை திமுக அரசு வஞ்சித்து வருவதாகவும் எனவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை புறக்கணித்து பாடம் புகுத்த வேண்டும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...