கோவையில் தேர்தல் பரப்புரை செய்வது குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோரின் வாக்குகளை வீடுகளுக்கே சென்று பதிவு செய்யும் பணிகளை கண்காணிப்பது, வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து வாக்கு சேகரிப்பது போன்ற பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட திமுக, பெரியகடைவீதி பகுதி - 1 அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி திமுகழக‌ வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல்.4) நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது வாக்குகளை வீடுகளுக்கே சென்று பதிவு செய்யும் பணிகளை தொடங்குவதை‌ கண்காணிப்பது, வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து, வாக்கு சேகரிப்பது போன்ற பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.



இந்த நிகழ்வில் தெற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாகராஜ், பெரிய கடைவீதி பகுதி-1 செயலாளர் மார்க்கெட் எம்.மனோகரன், பழக்கடை முத்து முருகன், வட்டக் கழகச் செயலாளர்கள் டவுன் பா.ஆனந்த், ப.ப.சிவக்குமார்,சுரேஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...