காங்கேயத்தில் மூத்த‌ குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான முதல் நாள் வாக்கு பதிவு தொடக்கம்

வீடு வீடாக சென்று வாக்கு பெறுவதற்கு முன்பு காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் திறந்து சோதனை செய்யப்பட்டு பிறகு எடுத்து செல்லப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் ஆகிய பகுதியில் உள்ள மூத்த‌ குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான முதல் நாள் வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது.



வீடு வீடாக சென்று வாக்கு பெறுவதற்கு முன்பு காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் திறந்து சோதனை செய்யப்பட்டு பின்னர் எடுத்து செல்லப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று வாக்கு சேகரித்தனர்.



தேர்தல் ஆணைய விதிகளின் படி 85 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த வாக்குபதிவிற்கு காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற நுண் பார்வையாளர்கள், காவல் துறையினர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் 9 பிரிவுகளாக பிரித்து அனைத்து பகதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வீடுவீடாக சென்று வாக்காளர்களிடம் வாக்கு பதிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...