திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பொள்ளாச்சியில் வாக்குசேகரிப்பு

சாதாரண மனிதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டால் மாதக்கணக்கில் தகவல் கிடைப்பதில்லை. ஆனால் அண்ணாமலை கடிதம் எழுதினால் இந்த நாட்டுடைய ரகசியத்தை ஒரு வாரத்திற்குள் தருகிறார்கள். இங்கு சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியை ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரையில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.



அப்போது இந்த நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக கூறிவிட்டு மத்திய அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு மோடி ஏமாற்றி விட்டார் என்று குற்றம் சாட்டிய செல்வப் பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, இந்தியாவில் ஜனநாயக ஆட்சியா? நடக்கிறது. சாதாரண மனிதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டால் மாதக்கணக்கில் தகவல் கிடைப்பதில்லை. ஆனால் அண்ணாமலை கடிதம் எழுதினால் இந்த நாட்டுடைய ரகசியத்தை ஒரு வாரத்திற்குள் தருகிறார்கள். இங்கு சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது, இந்த நாட்டில் மோடிக்கு ஒரு சட்டம், அண்ணாமலைக்கு ஒரு சட்டம், 140 கோடி மக்களுக்கு ஒரு சட்டமா? என்றும், 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கச்சத்தீவை புதிதாக பேசுகிறீர்கள். இந்திரா காந்தி இந்த நாட்டு மக்களின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து தன் உயிரை தியாகம் செய்தவர். அவரைப் பேசுவதற்கு மோடிக்கும் எந்த தலைவருக்கும் அருகதை இல்லை என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...