கோவையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் அதிகளவு வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதுடன் மேலும் பற்றாக்குறை என கண்டறியும் பகுதிகளில் லாரிகள் மூலமாகவும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவில் அந்தந்த பகுதிகளில் அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதி வாரியாகவும் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்குவதன் விவரம் குறித்து உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் தேவையினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திட ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அங்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 18005996000 பொருத்தப்பட்டுள்ளது.

இதில் புகார்கள் குறித்து தெரிவிப்பவர்களுக்கு உடனடியாக அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் சிலர் பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பி சாலை மறியல் போன்ற வன்முறை செயல்களை தூண்டி வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் யாரும் துணைபோக வேண்டாம். தாங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை என்றால் தங்கள் பகுதியில் உள்ள சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று தகவல் தெரிவித்தோ அல்லது கட்டணமில்லா தொலைபேசியில் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரின் அறிவுரைப்படி குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தேவையான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபோன்ற நிலையில் யாரேனும் சாலை மறியல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்கள் என கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...