மக்கள் விரோத ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது - தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு

சுங்கம், குமாரபாளையம், தெக்காலூர், வரப்பாளையம், தேர் பாதை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதிமுக மேற்கு ஒன்றியத்தின் சார்பில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் தலைமையில் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது. அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன் முன்னிலையில் நடைபெற்றது.



சுங்கம், குமாரபாளையம், தெக்காலூர், வரப்பாளையம், தேர் பாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவும், பொதுமக்கள் ஒரு விரல் புரட்சியில் இரண்டு விரலான இரட்டை இலை சின்னத்திற்கு உங்களது பொன்னான வாக்குகளை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.



அது மட்டும் இன்றி தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகரித்து விட்டதாகவும், குழந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் மிட்டாய்களிலும் போதை பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், தமிழகம் போதை மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...