துடியலூர் அருகே அண்ணாமலை பிரச்சாரம் – கிரேன் மூலம் மாலை அணிவித்து இந்து முன்ணணி அமைப்பினர் வரவேற்பு

கடந்த பத்து ஆண்டுகளில் நமக்காக 24 மணி நேரமும் உழைத்து நல்ல பல திட்டங்களை தந்துள்ள மோடிக்கு ஊதியமாக 2024 பாராளுமன்ற தேர்தல் 400 எம்பிக்களை பரிசாக வழங்க உள்ளோம் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராக்கிபாளையம் பிரிவு பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அங்கு பிரச்சாரம் செய்ய வந்த அண்ணாமலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 12 அடி உயரம் உள்ள மிகப்பெரிய பிரமாண்டமான மாலையை கிரேன் மூலம் அணிவித்து சிறப்பான வரவேற்பு வழங்கினர்.



அங்கு அண்ணாமலை பேசும்போது இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுதும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் நமக்காக 24 மணி நேரமும் உழைத்து நல்ல பல திட்டங்களை தந்துள்ள மோடிக்கு ஊதியமாக 2024 பாராளுமன்ற தேர்தல் 400 எம்பிக்களை பரிசாக வழங்க உள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் நாம் ஆட்சியில் இருந்த போதும் தமிழகத்தில் கிடைத்த எம்பிகளால் எந்த பயனும் ஏற்படவில்லை அனைத்து வசதிகள் இருந்தும் கோவை கடந்த 10 ஆண்டுகளில் எம்பிகளால் எந்த முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.



தமிழகத்தில் ஒரு முக்கிய நகரமாக இந்திய வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாகவும் உலக வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாகவும் கோவையை மாற்ற பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். மத்தியில் மோடி ஆட்சியில் இருக்கும் போது இங்கு உங்கள் வீட்டுப் பிள்ளை இந்த அண்ணாமலை இங்கு இருக்க வேண்டும்.

ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை வாக்கு இயந்திரத்தில் முதல் பட்டனாக உள்ள தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். அதன் பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பார்த்து அரசியலுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதவர்கள் கூட தற்போது பாஜக பக்கம் வந்துள்ளனர்.



அடுத்த 15 நாட்கள் தான் கடுமையான வேலை. நீங்கள் ஒவ்வொரு வீடாக சென்று பாஜகவிற்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் உங்களுக்காக நாங்கள் பாடுபடுவது எங்கள் பொறுப்பு என்றார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...