காங்கேயத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்கு சேகரிப்பு

மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பொதுமக்கள் நாள் குறித்து விட்டனர் என்றும், அம்மா காலத்தில் செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது என்றும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கீரனூர் மற்றும் சாவடிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ் தலைமை தாங்கினார்.



அதிமுக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பொதுமக்கள் நாள் குறித்து விட்டனர் என்றும், நமது அம்மா காலத்தில் செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது என்றும், மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பொதுமக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம், பெண்கள் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது எனவும் குறிப்பிட்டார்.



மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதுபான கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு மேலும் புதிய மதுபான கடைகளை திறந்து வைத்துள்ளனர். இப்போது புதிதாக குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய போதை பொருள்களை மிட்டாய்களில் கலந்து விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். அடுத்த தலைமுறைகளை கெடுக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது. திமுக அரசு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தாமல் பொதுமக்களின் அடிப்படைத் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட வரிகளை அதிகப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், மறவா பாளையம் ஊராட்சி செயலாளர் பி.கே.பி சண்முகம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...