கல்லாறு பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் - பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

25 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் 2ஜி ராசாவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். நீலகிரி பாராளுமன்றத் தொகுதி முழுக்க எந்த குறைகளையும் அவர் தீர்க்கவில்லை என பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், மேட்டுப்பாளையம், ஓடந்துறை ஊராட்சியை சேர்ந்த கல்லாறு பகுதியில் இன்று (ஏப்ரல்.2) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.



அப்போது மக்களிடையே பேசிய அவர், இந்த கல்லாறு கிராமத்தில் இருக்கின்ற ஆதிவாசி காலனி மற்றும் சமத்துவபுரம் ஆகிய சிற்றூர்களுக்கு இடையில், மேட்டுப்பாளையம் முதல் உதகை செல்லும் மலை இரயில் பாதை அமைந்துள்ளது. 150-க்கும் மேல் வீடுகள் அமைந்துள்ள, இந்த இரண்டு சிற்றூர்களையும் இணைக்கும் விதமாக சுரங்க நடைபாதை ஒன்று அமைத்துக் கொடுக்கச் சொல்லி, கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்திருக்கிறார்கள்.



ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும், புதிய திட்டப் பணிகள் மேற்கொள்வதற்காக, 2011-12 நிதியாண்டு முதல் தனித்தனியே ஆண்டிற்கு 5 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அந்த நிதியை வைத்து, நம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு தேவைப்படுகிற பணிகளை மேற்கொள்வது தான் அடிப்படை தார்மீகம். அவ்வகையில், இந்த ஊர்மக்கள் சொல்வதுபடி பார்த்தால் 25 ஆண்டுகளில், 10 ஆண்டுகள் 2ஜி ராசாவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இப்படி, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி முழுக்கவும், எங்குமே குறைகளும் தீர்க்கப்படவில்லை, வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும்படி கோரிக்கை வைத்த மக்களிடம், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...