பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஒரு ஜோடி இரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை-பாலக்காடு கோட்டத்தில், எட்டிமடை-வாளையார் ரயில் நிலையங்களுக்கு இடையே 'யானை வழிப்பாதை' அமைப்பதற்கான பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, வரும் (04.04.2024) அன்று ஒரு ஜோடி ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.1) அறிவித்துள்ளது.

அதன்படி கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும். இதேபோல ஷோரனூரில் இருந்து (4.4.2024) 15.10 மணிக்குப் புறப்படும், ரயில் எண்.06804 ஷோரனூர்-கோயம்புத்தூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...