வீரபாண்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிரச்சாரம்

தடாகம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் பெயரில் அர்ச்சனை செய்து அங்கிருந்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை அதிமுக சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் சின்ன தடாகம், மாங்கரை, வீரபாண்டி, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உடன் இணைந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.



இதில் சின்ன தடாகம் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் போது அங்கிருந்த பொதுமக்களுடைய பேசிய வேட்பாளர் ராமச்சந்திரன், தான் இதே பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் என்றும், தனக்கு வாக்களித்தால் எப்பொழுது வேண்டுமென்றால் சந்திக்கலாம் என்றும், உங்களுக்காக பாராளுமன்றத்தில் எனக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் இருந்து உங்களுக்காக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

தனது செல் நம்பர் அனைவருக்கும் தெரியும் என்றும், எப்போது வேண்டுமானாலும் எனது செல் நம்பருக்கு போன் செய்யலாம் ஒரு வேலை எடுக்காமல் இருந்தாலும் ஒரு நாளில் திரும்ப அழைப்பேன் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ்டு கால் ஆகாது என்று தெரிவித்தார்.



முன்னதாக தடாகம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட சிங்கை ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமி எஸ்.பி. வேலுமணி, பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் பெயரில் அர்ச்சனை செய்து அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...