மணியகாரம்பாளையத்தில் தூய்மை பணியாளர்களிடம் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு சேகரிப்பு

ஒவ்வொருத்தர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் அளிப்பேன் என்று பிரதம மந்திரி வாக்குறுதி கொடுத்தார். அது என்ன ஆயிற்று என்று நீங்கள் கேட்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்காளர்களிடம் கூறினார்.


கோவை: இந்தியா கூட்டணி கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (ஏப்ரல்.1) மணியகாரம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட காந்திமாநகரில் பிரச்சாரத்தை துவக்கினார்.



வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அப்பகுதியில் தூய்மை பணியாளர்களிடமும் வாக்குசேகரித்தார். அப்போது, கலைஞர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வருவதாகவும், இலவச பேருந்து பயணத்தால், பேருந்து கட்டணம் சேமிப்பாவதாகவும் தெரிவித்த தூய்மை பணியாளர்கள், தளபதி மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு தேவையானவைகளை வழங்கி வருவதுடன் தகுந்த பாதுகாப்பை அளித்து வருகின்றார் என்றனர்.

எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு தான் என வேட்பாளரிடம் தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசுகையில், இந்த தேர்தலை பொருத்தவரையில் ஒரு முக்கியமான தேர்தல். இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு தொகுதியாக நமது கோவை பாராளுமன்ற தொகுதி அமைந்திருக்கிறது. திமுக, செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. பல இடர்பாடுகளுக்கு நடுவே நிதி நெருக்கடியின் நடுவே பல சிறந்த திட்டங்களை மகளிருக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரே அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம்.

அதனால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக இன்றைக்கு தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. உங்களிடத்திலே வரக்கூடிய எதிரணி வேட்பாளர்கள் எதிரணி கட்சியினர் வருவார்கள், கடந்த 10 ஆண்டுகளாக இங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி நமக்கு என்ன கொடுத்தது என்றால்? விலை உயர்வு, விலை ஏற்றத்தை தான் கொடுத்தது. கேஸ் விலை, பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது. அன்பு சகோதரிகள் உங்கள் அனைவருக்கும் இது தெரியும். இப்படி இருக்க அவர்கள் ஏதோ நிறைய செய்தது போல உங்களிடத்திலே வந்து வாக்கு கேட்பார்கள். ஒவ்வொருத்தர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் அளிப்பேன் என்று பிரதம மந்திரி வாக்குறுதி கொடுத்தார். அது என்ன ஆயிற்று என்று நீங்கள் கேட்க வேண்டும். அதேபோல அண்ணா திமுகவை பொறுத்த வரைக்கும், அவர்களுக்கு பிரதம மந்திரி வேட்பாளர் என்பது கிடையாது. அவர்கள், இப்பொழுது பிஜேபியும் அவர்களும் தனியாக இருக்கிற மாதிரி தெரியும். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் சேர்ந்து கொள்வார்கள். வரக்கூடிய காலகட்டத்தில் இந்த விலைவாசி உயர்வை தடுத்திட, இந்த ஜிஎஸ்டி பிரச்சனைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல பாராளுமன்றத்தில் இந்த தொகுதியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதனால் தான் நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு பெருவாரியான ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...