மடத்துக்குளம் பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் அம்மாவின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும், மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களைய கொண்டு வரவும் பாடுபடுவேன் என்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரத்தொழுவு மெட்ராத்தி ,கணியூர், துங்காவி, ஜல்லிபட்டி, குறிச்சி கோட்டை உட்பட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்பொழுது அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளன.



இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு எனக்கு வாக்களித்தால் அம்மாவின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும், மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களையும் கொண்டு வர பாடுபடுவேன் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி. மகேந்திரன் , மடத்துக்குளம் பகுதி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...