பொது மக்களிடையே வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொள்ளாச்சியில் வானில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணர்வு

பொள்ளாச்சி பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், மாவட்ட மருத்துவமனை ஆகிய பகுதிகளில் என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய ராட்சத பலூன் வானில் பறக்க விடப்பட்டது.


கோவை: தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடையே தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் இன்று பொள்ளாச்சி பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், மாவட்ட மருத்துவமனை ஆகிய பகுதிகளில் என் வாக்கு என் உரிமை, 100% வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய ராட்சத பலூன் வானில் பறக்க விடப்பட்டது.



பொள்ளாச்சி சார் ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கேத்தரின் சரண்யா இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கடந்த முறை நடந்த முடிந்த தேர்தல்களில் குறைவான வாக்கு பதிவான இடங்களில் வாக்கு சதவீதத்தை உயர்த்த மக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...