கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தடாகம் பகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாக்கு சேகரிப்பு

தேர்தல் முடிவடைந்ததும் முதலமைச்சரிடம் பேசி வரும் காலத்தில் எந்த பிரச்சனையும் வராத வகையில் முறையான அனுமதி பெற்று நிரந்தரமாக செங்கல் சூளைகள் நடத்த அனுமதி பெற்றுத்தருவேன் என செங்கல் சூளை உரிமையாளர்களிடம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதியளித்தார்.


கோவை: கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களை சந்தித்து ஆலோசணை நடத்தினார்.



அப்போது அவரிடம் செங்கல் சூளை உரிமையாளர்கள் நீதிமன்ற தடையால் சீல் வைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை மீண்டும் நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டும் என செங்கள் சூளை உரிமையாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள அ.க. தடையையும் நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



அவர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. தேர்தல் முடிவடைந்ததும் முதலைமைச்சரிடம் பேசி வரும் காலத்தில் வேறு எந்த பிரச்சனையும் வராத வகையில் முறையான அனுமதி பெற்று நிரந்தரமாக செங்கல் சூளைகள் நடத்த அனுமதி பெற்றுத்தருவேன் என உறுதியளித்தார். மேலும் இது கண்டிப்பாக தீர்வு காணக்கூடிய பிரச்சனைதான். எனவே நிச்சய் தீர்வு பெற்று கட்டுமான தொழிலை மேம்படுத்த உறுதியளிக்கிறேன் என்றார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...