கோவையில் உள்ள முன்னணி இன்குபேட்டர் ஏஐசி ரைஸ் மற்றும் டைசில் உயிரித் தொழில்நுட்ப பூங்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஏஐசி ரைஸின் உயிரிசார் தொழில் நுட்பத்தை சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுக் கூடங்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸானது உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்பேட்டை முன்னேற்றக் கழகத்தின் கீழ் செயல்படுகின்ற டைசில் உயிரித் தொழில்நுட்ப பூங்கா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

இதன் வாயிலாக ஏஐசி ரைஸ் மற்றும் டைசில் உயிரி உயிரிசார் தொழில் நுட்பத்தை சார் தொழில் முனைவோர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வணிக வெற்றியை நோக்கி அவற்றைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏஐசி ரைஸின் உயிரிசார் தொழில் நுட்பத்தை சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுக் கூடங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏஐசி ரைஸின் சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் பயனடைவார்கள்.

இந்நிகழ்வில் ஏஐசி ரைஸின் சார்பில் இன்குபேஷன் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் பிரதீப் ராஜ் மற்றும் முதலீடுகள் மற்றும் வணிக மேலாண்மையின் துணைத் தலைவர் அருண்ராஜ் மாணிக்கராஜ் ஆகியோர் பங்கு பெற்றனர். மேலும், டைசில் உயிரி பூங்கா சார்பில் மேலாண்மை இயக்குநர் பூங்குமரன், நிர்வாக செயலர் காயத்ரி மற்றும் தலைமை மின் பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...