2 கிராம் தங்கத்தில் தேர்தல் விழிப்புணர்வு  - கோவை நகை வடிவமைப்பாளர் UMT ராஜா அசத்தல்..!

ஜனநாயகத்தின் திறவுகோல் நமது வாக்கு என்பதை குறிக்கும் விதமாக, 2 கிராம் எடையுள்ள தங்க பூட்டு - சாவியை வடிவமைத்துள்ளதாக ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா 100% வாக்குப்பதிவை குறிக்கும் வகையில் இரண்டு கிராம் தங்கத்தில் இந்திய வரைபடத்துடன் கூடிய ஒரு பூட்டையும், 100% வாக்கு என்ற சாவியை உருவாக்கி உள்ளார். 



மேலும், அந்த சாவியில் தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதியை குறிக்கும் விதமாக 19 என்ற எண்ணையும், தேர்தல் முத்திரையையும், தேர்தல் மை வைக்கப்படும் விரலையும் வடிவமைத்துள்ளார்.

ஜனநாயகத்தின் திறவுகோல் நமது வாக்கு என்பதை குறிக்கும் விதமாக, 2 கிராம் எடையுள்ள பூட்டு - சாவியை வடிவமைத்துள்ளதாக ராஜா தெரிவித்துள்ளார். 

மேலும், இதை வடிவமைக்க இரண்டு நாட்கள் செலவிட்டதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...