100 சதவீதம் வாக்குப்பதிவு: திருப்பூரில் இருசக்கர விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்

100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகன பேரணியை, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் உதவி ஆட்சியர்  கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்வு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 18 வயது நிரம்பிய அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. 



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் உதவி ஆட்சியர் கிருத்திகா விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். 



வாக்களிப்பது நம் உரிமை, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...