பொள்ளாச்சியில் ரூ. 25 ஆயிரம் டெபாசிட் பணத்தை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல்..!

10 ரூபாய் நாணயத்தை கடைகள், ஒரு சில அரசு அலுவலகங்களில் வாங்குவது கிடையாது என்பதால் வாங்க வேண்டுமென வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல்.


கோவை: வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவை தொகுதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்துப் போட்டியிடப்படுகிறது. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக உடுமலையைச் சேர்ந்த பெஞ்சமின் கிருபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



இந்நிலையில், இன்று பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை அளித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு உண்டான டெபாசிட் பணத்தை செலுத்துவதற்காக 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களை டெபாசிட் பணமாக செலுத்தினார்.

இதுகுறித்து வேட்பாளர் கூறுகையில், பத்து ரூபாய் நாணயத்தை கடைகளில் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களிலும் வாங்குவது கிடையாது. இதனால் பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து கடைகளிலும் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் நூதன முறையில் மனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...