ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் - பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர்

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பு மனு தாக்கலுக்குப் பின்பு திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பேட்டி.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார்.



இவர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி,

தென்னை விவசாயிகளின் அடிப்படை கொப்பரை விலை கிடைக்கவும், ரேஷனில் தேங்காய் எண்ணெய் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இளைஞர்களுக்கு தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்று பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றார்.

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஆனைமலையில் தொழில் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மக்களின் குடிநீர் தேவைக்கு ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும், தென்னை பயிற்சி மையம் ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...