கோவையின் வளர்ச்சியை கொண்ட திட்டங்களை செயல்படுத்த எந்த கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாக கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேச்சு.


கோவை: கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று, கோயம்புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோர்கள் மத்தியில் பா.ஜ.க மாநிலத் தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை உரையாற்றினார்.

பல்வேறு தொழில் நிறுவனங்கள், 200க்கும் அதிகமான கல்வி நிலையங்கள், இயற்கை வளங்கள் என வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை வளங்களும் இருந்தும், கோயம்புத்தூர் தனது முழுமையான வளர்ச்சியைப் பெற முடியாததின் காரணங்கள் குறித்துப் பேசினார்.



மேலும், கோயம்புத்தூரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்த இத்தனை ஆண்டுகள் எந்தக் கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விளக்கினார்.

அதேபோல, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதையும், அதற்குத் தேவையான தொலை நோக்குப் பார்வை உடையவர்களை, மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...