திருப்பூரில் ஆடு வாங்க எடுத்துச் செல்லப்பட்ட ரூ.88 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..!

தலா ஒரு நபர் ரூ.50 ஆயிரம் வைத்திருக்கலாம் என்று நினைத்து ஒரே வாகனத்தில் வந்ததாகவும், ஒரு வாகனத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்த காரணத்தினால் பணம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்ததாக வியாபாரிகள் வேதனை.


திருப்பூர்: வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, போதிய உரிமம் இன்றி பண பரிவர்த்தனைகள் அல்லது பணத்தை எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டம், காங்கேயம்வெள்ளகோவில் அருகே மயில்ரங்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறையை முன்னிட்டு கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சுமார் 4 நபர்கள் தலா ரூ. 22 ஆயிரம் என்ற வீதம் மொத்தம் ரூ. 88 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்து வந்திருந்தனர். மேலும், தேர்தல் விதிமுறைக்கு உண்டானமதிப்பை விட அதிகளவு தொகையை எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த 4 நபர்கள் கொண்டுவந்த ரூ. 88 ஆயிரம் பணத்தையும், லோடு ஆட்டோவையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மயில்சாமியிடம் ஒப்படைத்தனர்.



இதனை அடுத்து, வட்டாட்சியர் மயில்சாமி அந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர்கள் தாங்கள் சேலம் மாவட்டம்தாரமங்களத்தை சேர்ந்த ராஜா, அய்யனார், தனசேகர் மற்றும் முரளி என்றும் நாங்கள் 4 பேரும் ஆடு வியாபாரிகள் என்றும், வியாழக்கிழமை கன்னிவாடி வார வாரம் நடைபெறும் ஆட்டுச்சந்தைக்கு அடிக்கடி வருவதாகவும், இந்த வாரமும் ஆடுகளை வாங்க வந்துள்ளோம் என்றும், அதற்காக தலா ரூ. 22 ஆயிரம் பணத்தை வைத்திருந்தோம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், தலா ஒரு நபர் ரூ.50 ஆயிரம் வைத்திருக்கலாம் என்று நினைத்து ஒரே வாகனத்தில் வந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால் ஒரு வாகனத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்த காரணத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி போதிய உரிமமின்றி ரூ.88 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துச் சென்றதாக கூறி பணம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்ததால் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பதாக அந்த வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்..

ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வாங்க, விற்க நினைக்கும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு எந்த ஒரு வகையிலும் ரசீதுகள் இருக்காது. இந்த நிலையில் இவர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...