விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோவை மணிகூண்டு பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தின் போது, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த போலிசார் மாணவர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால், கைதாக மறுத்த மாணவர்கள் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். 



தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'டெல்லியில் 17வது நாளாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் தற்போது சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறோம். ஹைட்ரோகார்பன் திட்ட்ச்த்திற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் இருந்தும் அதை கையெழுத்திட்டமைக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, உடனடியாக அந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் தொடர்ந்து எங்கள் போராட்டம் நடைபெறும்'என்றார். 



இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...