உடுமலையில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் 44 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் திருட்டு - பொதுமக்கள் அச்சம்..!

இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எஸ்.வி.புரம்,பி.வி.லே-அவுட்டைச் சேர்ந்தவர் சாந்தாமணி(52). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதனிடையே, இன்று மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ 1 லட்சத்து 55 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

இதே போன்று, எஸ்.வி.புரம், ஆர்.ஜி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யாதேவி(29). இவர் கடந்த 16-ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு புதுக்கோட்டைக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர், இன்று மதியம் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.



அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது.

இதே போல, எஸ்.வி.புரம், கணேசாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாச்சம்மாள்(75). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக் கொண்டு அவரது மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த போது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரொக்கம் ரூ 36 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.



இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.வி.புரம் பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்த வீடுகளில் நடந்த திருட்டுச் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...